சாக்கடையாக மாறிய பாசன கால்வாய்

சோழவந்தான்: காடுபட்டியில் விவசாயத்திற்கு செல்லும் பாசன கால்வாய் சாக்கடையாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி தங்கத்துரை: காடுபட்டியை சுற்றியுள்ள மலைகளில் இருந்து மழைக்காலங்களில் வரும் நீர் கால்வாய் வழியாக ஊருணிக்குச் சென்று, அங்கிருந்து தென்கரை கண்மாய்க்கு செல்கிறது.
இக்கால்வாயால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.தற்போது இந்த கால்வாய் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து, நீரின் நிறம் கருப்பாக மாறி துர்நாற்றம் அடிக்கிறது.இதனால் நோய் தொற்று ஏற்படுவதுடன் ஊருணியும், கண்மாயும் மாசடைகின்றன.
பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படவும் விளைச்சல் குறையவும் வாய்ப்புள்ளது.
பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்
-
தொடர்ந்து உயரும் பாதிப்பு: கொரோனாவுக்கு 4 பேர் பலி
-
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
-
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
Advertisement
Advertisement