கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

நத்தம்: புதுக்கோட்டையில் சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி, நொண்டிச்சுவாமி ,கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு வத்திபட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை , பூஜை நடந்தது.

தொடர்ந்து நேற்று மாலை சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி, நொண்டிச்சாமி, கன்னிமார் , அரன்மனைகுதிரை, மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement