வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
கடந்த 6ம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு ஷோம கும்பம் மற்றும் யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று, காலை 6:00 மணிக்கு மங்களஹாரத்தி, குண்டங்கள் ஹோமம் நடந்தது. 10:20 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர், கோவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
-
பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
Advertisement
Advertisement