காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு

சென்னை:கடல் உயிரினங்களின் இன விருத்தியை கருத்தில் வைத்து, ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், காசிமேட்டில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நங்கூரமிடப்பட்டு உள்ளன.

பைபர் படகுகள், கட்டுமரங்கள் வாயிலாக மட்டுமே மீன்பிடி தொழில் நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன் வகைகள் விற்பனைக்கு வந்தன.

மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால், மீன் விலையும் உயர்வாகவே இருந்தது. தொடர் மீன்விலை உயர்வால், மீன் பிரியர்கள் மீன்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement