காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு
சென்னை:கடல் உயிரினங்களின் இன விருத்தியை கருத்தில் வைத்து, ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், காசிமேட்டில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நங்கூரமிடப்பட்டு உள்ளன.
பைபர் படகுகள், கட்டுமரங்கள் வாயிலாக மட்டுமே மீன்பிடி தொழில் நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன் வகைகள் விற்பனைக்கு வந்தன.
மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால், மீன் விலையும் உயர்வாகவே இருந்தது. தொடர் மீன்விலை உயர்வால், மீன் பிரியர்கள் மீன்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூடுதல் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க கூடாது: வீட்டுவசதி வாரியத்திற்கு ஐகோர்ட் 'குட்டு'
-
செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு
-
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி மகோற்சவம்; 1008 சுஹாசினி பூஜை
-
குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்
-
நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
-
சிவன் கோவில்களில் பிரதோஷம்
Advertisement
Advertisement