பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த குன்னவலம் பகுதியை சேர்ந்தவர் காவியா, 32. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.
ஒன்பது வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் 2019-ம் ஆண்டு கணவனை பிரிந்து மகனுடன் குன்னவலம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் காவியா குன்னவலம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 34, என்பவருடன் பழகி சென்னை வியாசர்பாடியில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
ஏழு மாத கர்ப்பமான காவியாவை ரவீந்திரன் கை விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து குன்னவலத்தில் வாழ்ந்து வந்தார்.
இதுகுறித்து காவியா மே மாதம் 13-ல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று ரவீந்திரனை கைது செய்த, மகளிர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்