பா.ஜ.,விலிருந்து அழைப்பு வரவில்லை

எங்கள் அரசியல் பயணம் வேகமாக தொடருகிறது. பா.ஜ.,வில் இருந்து, கூட்டணி பேச்சுக்கு, எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று, நாங்கள் எங்கும் சொல்லவில்லை.

தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நன்றி சொன்னோம். இது அரசியல் நாகரிகம். எந்த கட்சியாக இருந்தாலும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, அதற்கு நன்றி சொல்வது அரசியல் மாண்பு. அதைத்தான் நாங்கள் செய்தோம். இதனால் கூட்டணி மாறுமா, அதே கூட்டணி தொடருமா என்ற கற்பனை தேவையில்லை.

- பிரேமலதா

பொதுச்செயலர், தே.மு.தி.க.,

Advertisement