ஆசிய கால்பந்து: அசத்துமா இந்தியா * ஹாங்காங் அணியுடன் பலப்பரீட்சை

கோவ்லுான்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று இந்தியா, ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதன் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.
உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்தியா-வங்கதேசம் மோதிய முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
இன்று ஹாங்காங்கில் நடக்கும் போட்டியில் இந்திய அணி, 153 வது இடத்திலுள்ள ஹாங்காங்கை சந்திக்கிறது.
ஒரு வெற்றி
இரு அணிகளும் 1951 முதல் 24 போட்டிகளில் மோதின. இந்தியா 9, ஹாங்காங் 8ல் வென்றன. 7 போட்டி 'டிரா' ஆகின. தவிர ஹாங்காங் மண்ணில் கடைசியாக 1957ல் இந்தியா வெற்றி பெற்றது.
இம்முறை சுனில் செத்ரி தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்துக்கு எதிரான நட்பு போட்டியில் தோற்ற ஏமாற்றத்தில் உள்ளது. மறுபக்கம் ஹாங்காங் அணி, கடைசியாக பங்கேற்ற 12 போட்டியில் 1ல் தான் தோற்றது. புதிய பயிற்சியாளர் வெஸ்ட்உட் வருகை அணிக்கு பலம் சேர்த்துள்ளது. இன்று சொந்த மண்ணில் களமிறங்குவதால், இந்தியா கடும் சவாலை சந்திக்க நேரிடும்.
50,000 டிக்கெட்
ஹாங்காங்கில் கோவ்லுான் விமானநிலையம் இருந்த இடத்தில் புதியதாக ரூ. 33 கோடி செலவில், கய் தாக் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, முதன் முறையாக இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. மொத்தமுள்ள 50,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
மேலும்
-
தாய்ப்பால் தாங்க..! தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும்: பச்சிளம் குழந்தைகளின் உயிரை காக்க உதவலாம்
-
எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி எடுபடாது; உஷார் நிலையில் அ.தி.மு.க.,
-
265 பேருக்கு கொரோனா
-
எஸ்.சி., கணக்கெடுப்பு 22ம் தேதி வரை நீட்டிப்பு
-
மத்திய அரசுக்கு பூஜ்ய மதிப்பெண் முதல்வர் சித்தராமையா மதிப்பீடு
-
30 நிமிடங்களில் 11 கேழ்வரகு களி உருண்டை சாப்பிட்டு அசத்தல்