265 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில், 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நேற்று 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, 1,220 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 265 பேருக்கு தொற்று உறுதியானது. கர்நாடகா கொரோனா பரவும் அளவு, 40.7 சதவீதமாக உள்ளது.

இதுவரை 652 பேர் குணம் அடைந்துள்ளனர். ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 552 பேர் வீட்டில் தனிமையில் இருந்து, சிகிச்சை பெறுகின்றனர்.

சுகாதாரத்துறை கொரோனா சூழ்நிலை குறித்து, தீவிரமாக கண்காணிக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் பீதியடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றாலும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement