புகார் பெட்டி :சேதமடைந்த மின்மாற்றியின் கம்பத்தை மாற்ற வேண்டும்

சேதமடைந்த மின்மாற்றியின் கம்பத்தை மாற்ற வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், மல்லியங்கரணை கிராமத்தில், கடல்மங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஏரிக்கரை அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் வாயிலாக, அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மின்மாற்றியை தாங்கியுள்ள மின்கம்பங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்மாற்றி எந்நேரமும் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த மின்மாற்றியின் கம்பங்களை மாற்ற, மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஆதிகேசவலு,
மல்லியங்கரணை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement