இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நாளை குறைதீர் முகாம்

புதுச்சேரி : இ.எஸ்.ஐ., மண்ட அலுவலகத்தில் நாளை 11ம் தேதி குறைத்தீர்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, இ.எஸ்.ஐ., மண்டல இயக்குனர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்ட அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் 2வது புதன் கிழமை தோறும் குறைதீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, நாளை 11ம் தேதி மண்டல அலுவகத்தில், மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.

எனவே தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், தங்களுடைய இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைகளை தக்க ஆணவங்களுடன் சமர்ப்பிக்கலாம். கோரிக்கை மனுவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement