ஓட்டுனர் உரிமத்தின் மொபைல் எண்ணை; ஆதாருடன் சரிபார்க்க அறிவுறுத்தல்
புதுச்சேரி : ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் மொபைல் எண்ணோடு சரிபார்த்துக்கொள்ள போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து வாகனப்பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் உரிமையாளரின் மொபைல் எண் இருந்தால் மட்டுமே ஒ.டி.பி., பெற்று சேவைகளை பெற இயலும். தற்போது குறுச்செய்தி மற்றும் ஆன்லைன் சேவைகளை மேம்படுத்தி உள்ளது.
இந்த சேவையை வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமத்தில் உள்ள பெயர் மற்றும் மொபைல் எண், ஆதாரில் அட்டையில் உள்ள பெயர் மற்றும் மொபைல் எண்ணோடு பொருந்தி வந்தால் மட்டுமே பெற முடியும்.
ஆகவே, ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் மொபைல் எண்ணோடு நேர்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு இணைப்பதன் மூலம் அனைத்து வாகனப்பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதில் பெறலாம்.
மேலும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ்கள், காப்பீடு, வரி கட்டணங்கள் பாக்கி, இ-செல்லான், பிற முக்கிய சேவைகள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெறலாம்.
வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் பெயர் அல்லது மொபைல் எண் மாறி இருந்தால், அதனை மாற்றிட https://parivahan.gov.in ஆன்லைன் சர்வீஸ் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பெயர் சரியாக இருந்து மொபைல் எண்ணை மட்டும் மாற்ற விரும்பும் வாகன உரிமையாளர்கள் தங்களின் மொபைல் எண் பதியப்பட்ட முழு ஆதார் அட்டை நகல் மற் றும் வாகனத்தின் ஆர்.சி., முதல் பக்க நகலை dpatd@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி மாற்றி கொள்ளலாம்.
சேவைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0413- 2280170, 2280236 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன