கொரவள்ளிமேடு பள்ளியில் முப்பெரும் விழா

பாகூர் : கொரவள்ளிமேடு தியாகி சுப்ரமணியப் படையாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு பாராட்டு விழா, பிளஸ் 1 அறிவியல் பாடப் பிரிவு வகுப்பறை துவக்கம், சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
விரிவுரையாளர் காந்தி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் தில்லை கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரேவதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, அறிவியல் பாடப் பிரிவு வகுப்பறையை துவக்கி வைத்தார்.
பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கி, ஆசிரியர்களை கவுரவித்தார். 37 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். விரிவுரையாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன
Advertisement
Advertisement