அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு ஐ.டி.ஐ., க்கள் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் இந்தாண்டு சேர்வதற்கான கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பவோர் 8 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் https://www.centacpuducherry.in/itiadmission அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியின்போது,ஒவ்வொரு மாதமும் ரூ.1000உதவித்தொகை, தினமும் மதிய உணவு, இலவச சீருடை வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement