அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு ஐ.டி.ஐ., க்கள் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் இந்தாண்டு சேர்வதற்கான கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விரும்பவோர் 8 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் https://www.centacpuducherry.in/itiadmission அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியின்போது,ஒவ்வொரு மாதமும் ரூ.1000உதவித்தொகை, தினமும் மதிய உணவு, இலவச சீருடை வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன