வைகாசி விசாகம்: திருச்செந்துாரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

துாத்துக்குடி: வைகாசி விசாகம் விழாவில், திருச்செந்துார் கோவிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.
விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், வேல்களால் அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து, நேர்த்தி கடன் செலுத்தினர்.
சில பக்தர்கள் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தியும், அங்கபிரதட்சனம் செய்தும் வழிபட்டனர்.
சுவாமிமலை, பழநி உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு முருகன் கோவில்களிலும், வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிமையாக நடந்தது.
மேலும்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்