இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி

ரியாத்: இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை மேற்காசிய நாடான சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் உள்ளன. கடந்த மாதமே துவங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வேலை விசாவை தவிர, இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
கடந்தாண்டில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மற்ற விசாக்கள் வாயிலாக வந்தவர்கள், ஹஜ் பயணத்தில் சட்டவிரோதமாக பங்கேற்றனர். அதையடுத்து, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன