மயிலத்தில் வைகாசி விசாகம்

விழுப்புரம் : மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பிற்பகல் 12:00 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். 12:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் கிரிவல நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!