குடிநீர் சேவை துவக்க விழா

திருபுவனை : திருவாண்டார்கோயில் கிராமத்தில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.15.52 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணற்றின் குடிநீர் சேவையை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார்கோவில் கிராமத்தில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் ரூ.15.52 லட்சம் செலவில் புதிய ஆழ் குழாய் கிணறுமற்றும் குடிநீர் உந்து குழாய் அமைத்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த குடிநீர் திட்டத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று குடிநீர் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை கிராம குடிநீர்த்திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இந்தக் குடிநீர்த்திட்டத்தின் மூலம் திருவண்டார்கோயில் கிராமத்திலுள்ள சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பயன்பெறுவர்.
மேலும்
-
7000த்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை; 324 பேர் ஒரே நாளில் பாதிப்பு
-
2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
போக்குவரத்து போலீசுக்கு ஏ.சி. ஹெல்மெட்; இது இமாச்சல் ஸ்டைல்
-
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி!
-
180 மீட்டர் செல்ல ஓலா பைக்: தெருநாய்கள் தொல்லையால் வித்தியாசமாக யோசித்த இளம்பெண்
-
எளிதாகும் ரயில் பயணம்; பயணிகள் பட்டியல் வெளியீட்டில் புதிய நடைமுறை