ரூ. 11.60 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது  

கடலுார் : ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி 10,61,500 ரூபாய் மோசடியில் ஈடுட்டவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்-லைன் டிரேடிங் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் ஆசை வார்த்தை கூறி 10 லட்சத்து 61 ஆயிரத்து 500 ரூபாயை மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரளாவைச் சேர்நத யூனுாஸ், 34; என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர், கேரளா மாநிலம், மலப்புரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார், மலப்புரத்தில் பதுங்கியிருந்த யனுாைஸ நேற்று பிடித்து விசாரணை நடத்தியதில்,பணம் மோசடி செய்தை ஒப்புக் கொண்டார்.

தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து வங்கி கணக்குகளை பெற்று சைபர் குற்றவாளிகளுக்கு கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்ததும் தெரிந்துது. உடன், அவரை போலீசார் கைது செய்து, மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3ல் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க வங்கி கணக்கு விவரங்கள், மொபைல் எண், ஆதார் எண், ஓட்டுனர் உரிமம் போன்ற விவரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என எஸ்.பி., ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement