ரூ.35,000 கோடி முதலீடு டாடா மோட்டார்ஸ் இலக்கு
புனே : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2030க்குள் அதன் பயணியர் கார் வணிகத்தில், 33,000 - 35,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, நிதியாண்டு வருவாயில் 6 முதல் 8 சதவீதம் வரை மூலதன செலவுக்காக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதில், மின்சார வாகன வணிகத்திற்கு மட்டும், 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது எட்டு மாடல் கார்களை வைத்து உள்ள இந்நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 15 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
சியரா எஸ்.யூ.வி., அவின்யா பிராண்டின் கீழ் இரு இ.வி., கார்கள், இரு புதிய எரிவாயு மற்றும் மின்சார கார்கள் என மொத்தம் ஏழு புதிய மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன், 23 மேம்படுத்தப்பட்ட கார்களும் வர உள்ளன. பயணியர் கார் சந்தையில் இந்நிறுவனம் 14 சதவீதம் பங்கு வைத்துள்ளது.
மாருதி நிறுவனம் 70,000 கோடி ரூபாய் முதலீட்டில், நான்கு மின்சார கார்கள் உட்பட ஒன்பது புதிய மாடல் கார்களையும்; ஹூண்டாய் நிறுவனம் 18,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆறு மின்சார கார்கள் உட்பட 26 கார்களையும்; மஹிந்திரா நிறுவனம் ஏழு மின்சார கார்கள் உட்பட 16 கார்களையும் அறிமுகம் செய்ய உள்ளன.
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!