பேராசிரியர் பாஞ் ராமலிங்கத்திற்கு இந்திய பள்ளி உளவியலின் தந்தை விருது

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் பாஞ் ராமலிங்கத்திற்கு, இந்திய பள்ளி உளவியலின் தந்தை விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் பாஞ் ராமலிங்கம். ஒய்வு பெற்ற பின் அகமதாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இந்திய பள்ளி உளவியல் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். உளவியல் தொடர்பாக பல்வேறு மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், பேராசிரியர் பாஞ் ராமலிங்கத்திற்கு, ஆசிய பசிபிக் பள்ளி உளவியல் சங்கம் சார்பாக 'இந்திய பள்ளி உளவியலின் தந்தை' எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நடந்தது.
விழாவில், ஆந்திரா பல்கலைக்கழக பேராசிரியரும், இந்திய பயன்முறை உளவியல் சங்கத்தின் தலைவருமான ராஜூ 'இந்திய பள்ளி உளவியலின் தந்தை' விருதை பேராசிரியர் பாஞ் ராமலிங்கத்திற்கு வழங்கினார். இதில், பேராசிரியர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் பாஞ் ராமலிங்கம், இந்தியாவில் பள்ளி உளவியலின் வளர்ச்சியை உருவாக்கியவர். 28 ஆண்டுகளாக கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி துறைகளில் பட்டதாரி, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான பல பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார். 60க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள், 30 நுால் அதிகாரங்கள் மற்றும் 110க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி தொகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!