மொபைல் போன் டவர் மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: நகர் பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க கூடாது என குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலுார் சாலை நைனார்மண்டபம் சுதானா நகரில் திருநாவுக்கரசு தெரு உள்ளது. இந்த பகுதியில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு மொபைல்போன் டவர்கள் உள்ளன. மேலும், டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர் வீச்சால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என குடியிருப்பவர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement