மொபைல் போன் டவர் மக்கள் எதிர்ப்பு
புதுச்சேரி: நகர் பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க கூடாது என குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலுார் சாலை நைனார்மண்டபம் சுதானா நகரில் திருநாவுக்கரசு தெரு உள்ளது. இந்த பகுதியில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு மொபைல்போன் டவர்கள் உள்ளன. மேலும், டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர் வீச்சால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என குடியிருப்பவர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
Advertisement
Advertisement