பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் புகுந்த காட்டுமாடால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
நகரின் மையத்தில் உள்ளது பிரையன்ட் பூங்கா. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். சமீபத்தில் 62 வது மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில் பூங்கா மேற்குபகுதி வளாக சுவர் சேதமடைந்த நிலையில் அவ்வப்போது காட்டுமாடுகள் பூங்காவிற்குள் புகுந்து பூச்செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று காலை பூங்காவிற்குள் பயணிகள் இருக்கும் போது காட்டுமாடு ஒன்று நடமாடியது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். பின் வனத்துறையினர் காட்டுமாடை வனத்திற்குள் விரட்டினர். நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பூங்காவில் சேதமடைந்த வளாக சுவரை விரைந்து கட்ட வேண்டும்.
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!