டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்!

4


புதுடில்லி: தாய்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.


தாய்லாந்து, புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.


விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது.


விமானத்தின் கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement