கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்

சென்னை: கோவை, நீலகிரிக்கு இன்று (ஜூன் 13) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று (ஜூன் 13) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* ஈரோடு
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* தென்காசி
* தேனி
* கன்னியாகுமரி
நீலகிரிக்கு வரும் ஜூன் 14,15 ஆகிய 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* தென்காசி
* கன்னியாகுமரி
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி
* திண்டுக்கல்
நாளை மறுநாள் (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலை ப்பகுதிகள்
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
* மதுரை
* விருதுநகர்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
