கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்

1


சென்னை: கோவை, நீலகிரிக்கு இன்று (ஜூன் 13) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (ஜூன் 13) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி


* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* ஈரோடு

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* தென்காசி

* தேனி

* கன்னியாகுமரி

நீலகிரிக்கு வரும் ஜூன் 14,15 ஆகிய 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்



* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்


* தென்காசி


* கன்னியாகுமரி


கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி



* திண்டுக்கல்


நாளை மறுநாள் (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலை ப்பகுதிகள்

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* தேனி

* தென்காசி

* கன்னியாகுமரி

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்

* திண்டுக்கல்

* மதுரை

* விருதுநகர்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement