அரசு அச்சக பணியாளர்களுக்கு குடியிருப்புகள்

புதுவண்ணாரப்பேட்டை:அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 40 கோடி ரூபாய் செலவில், புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். மேயர் பிரியா, வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் கூறியதாவது:
தமிழக அரசின் எழுதுப்பொருள், அச்சுத் துறையின் அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 40 கோடி ரூபாய் செலவில் புதுவண்ணாரபேட்டை, காமராஜர் நகரில், புதிதாக ஆறு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் 96 பணியாளர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 430 சதுர அடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தளத்திலும் 16 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
-
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலி