நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

புவனேஸ்வர்;ஒடிசா-ஜார்க்கண்ட் எல்லையில் இன்று காலை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எப்.,அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலம் சுந்தர்கஹ் மாவட்டம், நக்சல் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் அங்கு நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் போது சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலியாகி உள்ளார்.
அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மே-27 ம் தேதி அன்று கல் குவாரியில் இருந்த வெடிபொருட்களை திருடிய நக்சல்களை, ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள சரண்டா வனப்பகுதியில் தேடுதல் பணிக்குழுவில் உ.பி.,யின் குஷிநகரைச் சேர்ந்த 134 வது சி.ஆர்.பி.எப்., பட்டாலியனை சேர்ந்த ஏ.எஸ்.ஐ., சத்யபன் குமார் சிங் 34, ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கே பாலாங் கிராமத்திற்கு அருகே, காலை 6 மணியளவில் ஐ.இ.டி., குண்டு வெடித்ததில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்தார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும்
-
நெல் ஆதாரவிலை ரூ.600 உயர்வு
-
மகப்பேறு வார்டில் கட்டுக்கடங்காத கூட்டம்
-
அரசின் கண்ணில் மண்ணை துாவி தங்கம் இறக்குமதி: சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வரி ஏய்ப்பு
-
'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்
-
மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!