பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை
வளவனுார்: விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த ராம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 26; கூலி தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை, பக்கத்து கிராமமான சொரப்பூரில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
வளவனுார் போலீசார், ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்காக, ரஞ்சித்குமார், அவரது நண்பர்கள் ஜூன் 11ல் சொரப்பூரில் பேனர் வைத்தனர்.
அதில், சிலரது பெயர் சேர்த்த பிரச்னையில் பேனர் கிழிக்கப்பட்டதால், நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சொரப்பூரில் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் மது அருந்திய போது, அங்கு சென்ற ரஞ்சித்குமாருக்கும், மற்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது சிலர் பீர் பாட்டிலால் தலையில் அடித்ததில் ரஞ்சித்குமார் இறந்தது தெரிய வந்தது. வளவனுார் போலீசார், சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்; மீட்க அரசு நடவடிக்கை
-
டெலிகிராம் கணக்கை கைப்பற்றும் மோசடிப்பேர்வழிகள்: இந்தியாவில் பலர் பாதிப்பு