'மா' விற்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு யாதவ மகாசபை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி அணி சார்பில், மா விளைச்சலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்-யக்கோரி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழக அரசு, மா விவசாயிகளுக்கு உரிய மரியாதை கொடுக்-காமல் உள்ளது. விவசாயிகளுக்கு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். மத்திய, மாநில அர-சுகள் மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் மூலம் பலவிதமான ஐஸ்கிரீம்களை தயார் செய்து விற்கும்போது, மா பழச்சாற்றை பெற்று ஐஸ்கிரீம் மற்றும் பொருட்களை மதிப்பு கூட்டி பல்வகை கூல்டிரிங்ஸ் உற்-பத்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.
கூட்டுறவு மூலம் தமிழகத்தில் மா தொழிற்சாலை தொடங்க வேண்டும். தற்போது வரவுள்ள மாங்கனி கண்காட்சியில், அடிப்-படை ஆதார விலை, 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். ஆந்திர அரசு, 4 ரூபாய் உற்பத்தி மானியம் அறிவித்-துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உற்பத்தி மானியம் அறி-விக்க வேண்டும். அன்னிய நாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா-விட்டால், மாங்கனி கண்காட்சி நடைபெறும் இடத்தில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு பேசினார்.
சக்திவேல், ராஜி, கோவிந்தராஜி, ஜெயக்குமார், சவுந்தரராஜன், சிவகுரு, தட்சணாமூர்த்தி உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட மா விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement