பா.ஜ., ஆட்சி அமைந்தால் திட்டங்கள் எல்லாம் போய் விடும்; எம்.எல்.ஏ.,

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க.,வின், ஓசூர் மாநகர கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு பகுதி மற்றும் ஓசூர் ஒன்றிய ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்கள், குழு உறுப்பி-னர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனித்த-னியாக நேற்று
நடந்தது.
மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநகர செயலாளர் மேயர் சத்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு பூத்திலும், 40 சதவீத வாக்காளர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். இப்பணி வரும், 20ம் தேதி துவங்கி அடுத்த மாதம், 30ம் தேதி வரை நடக்கிறது. தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை எடுத்து கூறி, கட்சியில் உறுப்பினர்-களை சேர்க்க வேண்டும். யாரையும் கட்சியில் சேர கட்டாயப்ப-டுத்த கூடாது. விருப்பத்தின் பேரில் முன்வந்து சேரும் வகையில், வீடு, வீடாக சென்று
கட்சியினர் பேச வேண்டும். பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைந்தால், நல்ல திட்டங்கள் எல்லாம் போய் விடும். 2026 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, முதல்வராக மீண்டும் ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் அமருவார்.
இவ்வாறு பேசினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, பகுதி செய-லர்கள் ஆனந்தய்யா, வெங்கடேஷ், மாநகர அவைத்தலைவர் செந்தில், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்-பாளர் இக்ரம் அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement