நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!

1

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூன் 15) 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.


இன்று (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தென்காசி,

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

இன்று (ஜூன் 14) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

நாளை (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்


* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

நாளை (ஜூன் 15) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தர்மபுரி

* ஈரோடு

* சேலம்

* திருப்பூர்

* திண்டுக்கல்

* மதுரை

* விருதுநகர்

நாளை மறுநாள் (ஜூன் 16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

நாளை மறுநாள் (ஜூன் 16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தர்மபுரி

* ஈரோடு

* சேலம்

* நாமக்கல்

* திருப்பூர்

* திருச்சி

* திண்டுக்கல்

* மதுரை

* விருதுநகர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement