நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜூன் 15) 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று (ஜூன் 14) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தென்காசி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
இன்று (ஜூன் 14) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
நாளை (ஜூன் 15) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
நாளை (ஜூன் 15) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தர்மபுரி
* ஈரோடு
* சேலம்
* திருப்பூர்
* திண்டுக்கல்
* மதுரை
* விருதுநகர்
நாளை மறுநாள் (ஜூன் 16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
நாளை மறுநாள் (ஜூன் 16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தர்மபுரி
* ஈரோடு
* சேலம்
* நாமக்கல்
* திருப்பூர்
* திருச்சி
* திண்டுக்கல்
* மதுரை
* விருதுநகர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
-
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய திருடன் தப்பி ஓட்டம்
-
மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது
-
ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டப பணி விறுவிறு
-
வக்பு சட்டத்தால் முஸ்லிம்கள் முன்னேற்றம்