நெல் ஆதாரவிலை ரூ.600 உயர்வு

ஒட்டன்சத்திரம் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ. 600 உயர்த்தி வழங்குகிறோம் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோயில்வலசு, மேட்டுப்பட்டி ஊராட்சிகளில் புதிய தார் சாலை , நிழற்குடை, நியாய விலை கடை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம் அமைக்க அடிக்கல் நாட்டியும், ரூ.5.01 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்த அவர் பேசியதாவது:

நெல்லுக்கு குவிண்டால் ரூ.600 உயர்த்தி ரூ. 2500 வரை வழங்குகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் ஆதார விலையாக ரூ.1960 மட்டுமே வழங்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 260 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்ட புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் 100 கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன், தாஹிரா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜா மணி , செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement