46,350 டன் அரிசியை கொள்முதல் செய்ய டெண்டர் கோரிய காண்பெட் நிறுவனம்
புதுச்சேரி, : ரேஷனில் வழங்கும் இலவச அரிசியை கொள்முதல் செய்யும் பணிக்கான டெண்டர் கோரும் பணியை ஆன்லைனில் புதுச்சேரி காண்பெட் நிறுவனம் துவங்கியுள்ளது.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ என்று ஒற்றை அவியல் வெள்ளை அரிசி புதுச்சேரி அரசு சார்பில், கடந்தாண்டு டிசம்பர் முதல் இலவசமாக வழங்கி வருகிறது.
இதில் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு மாதத்திற்கு மட்டும் ரூ.23 கோடி செலவில் 5,150 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களில் விநியோகிக்க இலவச அரிசியின் மொத்த தொகை மட்டும் 100 கோடி ரூபாய் ஆகியுள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் துவங்கி கடந்த மார்ச் மாதம் வரைக்கான அரிசி டெண்டர் முலம் வாங்கி விநியோகிக்கப்பட்டது.
இந்தாண்டு ஏப்ரல் துவங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அரிசி விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களிடம், டெண்டர் கோரும் பணிகள், அரசு உத்தரவு பெறுவதில் காலதாமதம் ஆனதால், இது ரேஷன் அரிசி விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என, கருதப்பட்டது.
அதனால் ஏற்கனவே அரிசி விநியோகம் செய்த நிறுவனத்திற்கு மீண்டும் நான்கு மாத காலத்திற்கு மட்டும் அரிசி விநியோகிக்க அரசு சார்பில், உத்தரவு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியதால், வரும் ஆகஸ்ட்டில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விநியோகத்திற்கு தேவைப்படும் 46,350 மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்வதற்கு நேற்று முன்தினம் முதல் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் காண்பெட் நிறுவனம் ஆன்லைனில் டெண்டர் கோரும் பணியை துவங்கியுள்ளது.
இதில் பங்கேற்கும் நிறுவனங்களின் டெண்டர்கள் அடுத்த மாதம் ஏழாம் தேதி திறக்கப்பட்டு பரிசிலிக்கப்பட உள்ளது. இதேபோல் மாகிக்கு 70 மெட்ரிக் டன் அரிசிக்கான டெண்டர் நாளையும், ஏனாமிற்கு 236 மெட்ரிக் டன் அரிசிக்கான டெண்டர் நாளை மறுநாளும் துவங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா இரண்டு கிலோ கோதுமை வழங்குவதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருவதாக காண்பெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு
-
கர்நாடகா, டில்லி, மஹாராஷ்டிரா கேரளாவில் கொட்டி தீர்த்தது கனமழை; 10 பேர் பலி
-
நிலம் தருவதாக ரூ.2,700 கோடி மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தப்பி ஓட்டம்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
-
மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்