சுருளி அருவியில் தர்ப்பணம் மண்டபம் கட்ட வலியுறுத்தல்
கம்பம்,: சுருளி அருவியில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், ஆற்றங்கரையில் அமர்ந்து கொடுக்க வசதியாக, மண்டபம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் இருப்பது சுருளி அருவி. இது தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற இடமாகும்.
குறிப்பாக தை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த நாட்களில் இடநெருக்கடி ஏற்படும்.ஆற்றங்கரையில் உட்கார கூட இடம் கிடைக்காது. திறந்த வெளியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் போது, மழை பெய்தால் மிகவும் சிரமமாகும்.
ஆற்றுப் பாலம் அருகில் தர்ப்பண மண்டபம் கட்ட கம்பம் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதுக்களும், மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு
-
கர்நாடகா, டில்லி, மஹாராஷ்டிரா கேரளாவில் கொட்டி தீர்த்தது கனமழை; 10 பேர் பலி
-
நிலம் தருவதாக ரூ.2,700 கோடி மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தப்பி ஓட்டம்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
-
மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்
Advertisement
Advertisement