காகித பொம்மை தயாரிப்பாளர்கள் புவிசார் குறியீடுக்கு காத்திருப்பு அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும் கிடைக்கல

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் காகித பொம்மைகளுக்கு, புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இரு ஆண்டுகளாகியும், புவிசார் கிடைக்காமல் உள்ளது.
தமிழகத்தில், காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லி, தஞ்சை வீணை, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இந்த புவிசார் குறியீடு என்பது ஒரு இடத்தை மையப்படுத்தி உற்பத்தி செய்யப்படும், புகழ் பெற்ற பொருட்களுக்கு மத்திய அரசு வழங்கும் அங்கீகாரமாகும்.
தமிழக சட்டசபையில், 2023ல் மார்ச் மாதம், கைவினை பொருட்கள் தொடர்பான மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, காஞ்சிபுரம் காகித பொம்மை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, கைவினை பொருட்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருந்தார்.
சட்டசபையில், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதால், தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என, பொம்மை உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரில், வரதராஜ பெருமாள் கோவில் அருகேயுள்ள அஸ்தகிரி தெரு, பொம்மைக்கார தெரு, ஆனைகட்டித்தெரு என, சின்ன காஞ்சிபுரம் பகுதியின் பல தெருக்களில், காகித பொம்மை தயாரிக்கும் பணியை, தலைமுறைகளாக ஆயிக்கணக்கான தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பட்டு சேலைக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நிலையில், காகித பொம்மைகளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால், உற்பத்தி அதிகரிப்பதோடு, தொழிலாளர்களின் குடும்ப பொருளாதாரமும் உயரும் என பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காகித பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும், நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கிய விசேஷ நாட்கள் வரும் முன்பாக, பொம்மைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும்.
எங்களிடம் முகவர்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர். ஒரு பொம்மை தயாரிக்க ஒரு வாரத்திற்கு மேலாகிறது. மழைக்காலங்களில் இந்த பொம்மைகள் தயாரிக்க முடியாது.
கோடை காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்வோம். பொம்மைகளின் அளவுக்கு ஏற்ப, 100 - 400 ரூபாய் வரை பொம்மை விலைகள் மாறுபடும்.
புவிசார் குறியீடு காகித பொம்மைகளுக்கு கிடைத்தால், எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளி மாநிலங்களில் எங்கள் பொம்மைகள் அதிகளில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இதனால், உற்பத்தி அதிகமாவதோடு, வாழ்வாதாரம் கிடைக்கும். இதற்கு, புவிசார் குறியீடு உதவும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு