போருக்கு மத்தியில் இன்டர்நெட் சேவை; எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரானில் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 3வது நாளாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், தங்களின் முழு ராணுவ பலத்தின் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இன்டர்நெட் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் போது, மீண்டும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சாட்டிலைட் மூலம் வழங்கப்படும் இந்த இன்டர்நெட் சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும். எலான் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதனிடையே, ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்கியதன் மூலம், ஈரானின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை எலான் மஸ்க் அடித்து விட்டார் என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, ஈரானில் ஸ்டார்லிங் சேவை தொடங்கியது என்று அவர் பதிலளித்துள்ளார்.

மேலும்
-
சாலை வெட்டு பள்ளங்களால் பகுதிவாசிகளுக்கு கடும் சிரமம் உடனடியாக சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
-
மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்
-
ஓடாத ஆட்டோவுக்கு மாதம் ரூ.5,000 வாடகை மகளிர் சுய உதவி குழுவினர் புலம்பல்
-
குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்
-
உடைக்கப்பட்ட வடிகால்வாய் சீரமைப்பு
-
நடைபாதை கட்டும் பணி அண்ணா நகரில் முடக்கம்