தாசில்தார்கள் பொறுப்பேற்பு

செஞ்சி : செஞ் சியில் தாசில்தாராக பணிபுரிந்த செல்வகுமார் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். செஞ்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த துரைச்செல்வன் செஞ்சி தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் தனித்துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த ரமேஷ், பதவி உயர்வு வழங்கப்பட்டு செஞ்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement