வாலிபரை கத்தியால் வெட்டிய 7 பேர் கைது
நெய்வேலி : நெய்வேலியில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மேற்கிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பிரபு,30; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 30ல் இருந்து, இருப்பு கிராமத்திற்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரில் காட்டுக் கூடலுார் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் வாஞ்சிநாதன் ஓட்டி வந்த பைக் மீது, பிரபு ஓட்டி வந்த பைக் மோதியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன், தனது நண்பர்களை வரவழைத்து பிரபுவை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் வெட்டினார்.
மேலும் பிரபு வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் பேரில், தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து, வாஞ்சிநாதன், வீரசிங்கன்குப்பம் கிராமம் வேலு மகன் சம்பத்குமார் 29. காட்டுக்கூடலுார் கிராமம் அண்ணாதுரை மகன் அழகிரி, 20; செம்மங்குப்பம் ராயர் மகன் உத்தண்டி 25; வட்டம் 21ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் தினேஷ்குமார் 27; சின்ன காப்பங்குளம் கிராமம் குமார் மகன் ஆகாஷ் 20, ரவி மகன் ஹரிஷ்குமார், 19; கருணாநிதி,20; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
விளைநிலைங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; நஷ்டம் ஏற்படுவதோடு, அச்சத்தோடு வாழ்வதாக விவசாயிகள் வேதனை
-
சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு
-
ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு