சான்பிரான்சிஸ்கோ- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது; பயணிகள் பத்திரமாக மீட்பு

6


கோல்கட்டா: சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது ஏற்பட்டது. கோல்கட்டா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.


சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கோல்கட்டா வழியாக வந்து கொண்டிந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-200LR ரக விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். ஏர் இந்தியா விமானத்தில் பழுது ஏற்பட்ட நிலையில், திட்டமிட்ட நேரத்தில் கோல்கட்டா விமான நிலையத்தை அடைந்தது.

திட்டமிட்ட நேரமான நள்ளிரவு 12.45க்கு கோல்கட்டா விமான தரையிறக்கப்பட்டது. எஞ்சின் பழுதால் அதிகாலை 5.20 மணி அளவில் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார். விமானிகள் அனைவரும் கீழே இறக்கவிடப்பட்டதை அடுத்து நிபுணர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.



கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய 30 வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் உயிர் தப்பினார்.


ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து விமானங்களில் கோளாறு ஏற்படுவதும், விபத்தில் சிக்குவதும், போன்ற நிகழ்வுகள் விமானப் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement