வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி

மூணாறு; பீர்மேடு அருகே வனத்தினுள் பெண் இறந்த சம்பவத்தில் போலீசார், வனத்துறை ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதால் உண்மை நிலவரத்தை கண்டறிவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் தோட்டப்புரா பகுதியைச் சேர்ந்த பினு 54, தனது மனைவி சீதா 50, வுடன் ஜூன் 13ல் வன விளை பொருட்களை சேகரிப்பதற்கு வனத்தினுள் சென்றார்.
அப்போது சீதாவை காட்டு யானை தாக்கியதாகவும், தனக்கும் காயம் ஏற்பட்டதாகவும் பினு அலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்களை மீட்டு பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே சீதா இறந்து விட்டதாக தெரியவந்தது.
அவரது உடல் ஜூன் 14 ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது காட்டு யானை தாக்கி இறக்கவில்லை என தெரியவந்தது. பினுவிடம் போலீசார் விசாரித்தபோது காட்டு யானை தாக்கி சீதா இறந்ததாக கூறினார்.
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் காட்டு யானை நடமாடியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்ததால் பினுவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
இருப்பினும் அவர் தனது பதிலில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் பீர்மேடு டி.எஸ்.பி. விஷால்ஜான்சன் தலைமையில் போலீசார், வனத்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
அதன் பிறகு டி.எஸ்.பி. கூறுகையில்., சம்பவம் நடந்த இடத்தில் யானை நடமாடியதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்தார்.
யானை நடமாடிய அறிகுறி இல்லை என வனத்துறையினர் கூறிய நிலையில் அதற்கு எதிராக போலீசாரின் பதில் உள்ளதால் உண்மை நிலவரத்தை கண்டறிவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்