20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 20ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 20 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement