ஓய்வு சத்துணவு ஊழியர் கோபியில் ஆர்ப்பாட்டம்
கோபி, பொது வருங்கால வைப்பு நிதியை வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், கோபி நகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டத்தலைவர் ஆண்டாள் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஜோசப் குரூஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாவட்ட தலைவர் பழனிவேலு, கோட்ட செயலாளர் கருப்புசாமி, வட்ட செயலாளர் கதிரவன், வட்ட பொருளாளர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
Advertisement
Advertisement