குத்துச்சண்டை விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.9.45 லட்சத்தில் குத்துச்சண்டை அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு 40 மாணவர்கள் தினசரி குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கென தனியாக குத்துச்சண்டை அரங்கம் இல்லாத சூழல் உள்ளது.
இதையடுத்து குத்துச்சண்டை மைதானம் அமைக்க கனிம வள சினியரேஞ்ச் நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ரிங் வசதி கொண்ட மேடை, சிமென்ட் தளமும் அமைக்கப்பட்ட அரங்கமாக, மாணவர்கள் பயிற்சி எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன்மணிமாறன் கூறியதாவது: இது இலவச பயிற்சி தான். பயிற்சி பெற விரும்புவோர் வரலாம். காலை, மாலை இருவேளை பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார்.
மேலும்
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,