சோதுகுடியில் விஷ வண்டு கடித்து 6 பேர் காயம்

இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் கேசவ ரூபன் 14, இவர் இளையான்குடியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை வீட்டில்இருந்து பள்ளிக்கு சைக்கிளில் சென்ற போது ஆண்டியூரணி பகுதி அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளிலிருந்து கிளம்பிய விஷ வண்டுகள் அவரை கடித்தது.

மாணவரின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த தாயமங்கலத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் சுந்தரராஜன் 63,தளிர்தலை கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ் மகன் ஜேம்ஸ் 42, நாகமுகுந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த முனியன்மகன் கண்ணன் 69, மற்றும் சிலர் மாணவரை காப்பாற்ற சென்றபோது அவர்களையும் விஷ வண்டுகள் கடித்தன.

காயமடைந்த மாணவர் கேசவ ரூபன் உள்ளிட்ட நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement