பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சேலம் : பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.


இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், சேலத்தில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டிமணி, அமிர்தராஜ் உட்பட, 35 பேர் அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement