பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
சேலம் : பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, சில நாட்களாக, பா.ம.க.,வினர் குழப்பத்தில் உள்ளனர். இருவருக்கும் நடக்கும் மோதலில், யாருடன் செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் சிலர் மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட செயலர் லண்டன் அன்பழகன், சேலத்தில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் கொள்ளிடம் ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், மாநில துணை செயலர்கள் குட்டிமணி, அமிர்தராஜ் உட்பட, 35 பேர் அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
Advertisement
Advertisement