வாளுடன் வந்த 4 பேர் கைது
மானாமதுரை; மானாமதுரையில் இரவில் வாளுடன் வலம் வந்த கல்லுாரி மாணவர் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வாள், அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை பகுதியில் இரவில் சிலர் வாளுடன் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மானாமதுரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாளுடன் சுற்றிதிரிந்த சிவகங்கை மேலவாணியங்குடியை சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் 19, ராஜகம்பீரம் முனியாண்டி மகன் தினேஷ் 20, மணி பாண்டியன் மகன் ஆகாஷ் 19, முகமது ரபிக் மகன் முகமது பையாஸ் 19 இவர் மதுரையில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார்.
4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 வாள், 2 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
Advertisement
Advertisement