காரைக்கால் மாங்கனி திருவிழா பந்தல் கால் முகூர்த்தம் நடந்தது

காரைக்கால்,: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா முன்னிட்டு நேற்று பந்தல் கால் முகூர்த்தம் நடந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் புனிதவதி. 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இவரின் வரலாற்றை குறிக்கும் வகையில் இங்கு ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் போடுவதற்கான பந்தல் கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. முன்னதாக அம்மையார் மற்றும் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் வரும் ஜூலை 8ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைக்கும் நிகழ்ச்சி, 9ம் தேதி திருக்கல்யாணம் உற்சனம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைச் சாற்று புறப்பாடு நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூலை 10ம் தேதி பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா செல்லும் போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகயைில் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அன்று மாலை அம்மையார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 11ம் தேதி காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement