பைக் மீது லாரி மோதல் 2 நடன கலைஞர்கள் பலி

பெங்களூர: லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு நடன கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு ரூரல், நெலமங்களாவில் உள்ள குனிகல் பைபாசில், நேற்று காலை பைக்கில் இருவர் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
எதிர்திசையில் இருந்து வந்த லாரி, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. பைக் நொறுங்கியது. பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள், நெலமங்களா போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் பெங்களூரு, ஸ்ரீராமபுராவை சேர்ந்த நடன கலைஞர்கள் பிரஜ்வல், 22, சஹானா, 21, என்பது தெரிந்தது.
இவர்கள் இருவரும் துமகூரில் நடன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சம்பளத்தை வாங்கிவிட்டு பெங்களூரு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்