பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு
கோலார் :கோழிப்பண்ணையில் தண்ணீர் என நினைத்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோலார் மாவட்டம், சீனிவாசபுராவின், ராயல்நாடு கிராமத்தில் வசித்தவர்கள் தேவப்பா, 60, தாசப்பா, 62. இவர்கள் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றினர். நேற்று மதியம் உரத்தை கோணிப்பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
தாகமாக இருந்ததால், குடிக்க நீர் தேடினர். பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, தண்ணீர் என நினைத்து குடித்தனர். விஷத்தன்மை பாதிக்கப்பட்டு, துடிதுடித்தனர்.
இதை கண்ட அப்பகுதியினர், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்
-
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்; விழிப்புணர்வு பயணத்தில் ஒரு வேடிக்கை
-
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
Advertisement
Advertisement