பொற்பந்தல் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்தது.
இதனால், இரண்டு ஆண்டுகளாக அங்குள்ள நூலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இங்கு, போதிய கழிப்பறை வசதி, இடவசதி இல்லாமல் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், அயோத்திதாச பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடமும் கட்டப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து மூன்று மாதமாகியும், இதுவரைக்கும் அங்கன்வாடி கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே, புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு திறக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா
-
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு
-
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்