திருட்டு டூ - வீலர்களை வாங்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி கைது

மதுரை:மதுரையில் திருடிய டூ - வீலர்களை, குறைந்த விலைக்கு வாங்கி விற்ற நாமக்கல் பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை புதுார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தினேஷ்வரன், 33, என்பவர் ஓட்டிவந்த வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லை. விசாரணையில், அவர் மதுரை புதுார், தல்லாகுளம் பகுதிகளில் டூ - வீலர்களை திருடி வந்தது தெரிந்தது.
திருடிய டூ - வீலர்களை குமாரபாளையம் ஹிந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, 32, வட்டமலை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் கவுதம், 23, பா.ஜ., தரவு மேலாண்மை மாவட்ட துணைத்தலைவர் விவேக்பாலாஜி, 40, ஆகியோரிடம் கேட்ட விலைக்கு தினேஷ்வரன் விற்று வந்துள்ளார்.
திருட்டு டூ - வீலர்களை பாலாஜி உள்ளிட்டோர் 'சர்வீஸ்' செய்து, நாமக்கல் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர். நான்கு பேரையும் மதுரை போலீசார் கைது செய்து, 13 டூ - வீலர்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா
-
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு
-
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்